2012/07/30

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்




இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன

 
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

வருடம் இடம் வருடம் இடம்
1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900 பாரீஸ், பிரான்ஸ்
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1908 லண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரீஸ், பிரான்ஸ் 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் யூனியன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, ஸ்பெயின்
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA 2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரீஸ் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அண்மையில் 2008-ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நாட்டின் பெய்ஜிங் நகரில் நடந்தேறியது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.

பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

வருடம் இடம் வருடம் இடம்
1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 1928 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1936 கார்மிஷ்ச், ஜெர்மனி
1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 1952 ஆஸ்லோ, நார்வே
1956 கார்டினா, இத்தாலி 1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA
1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1968 க்ரெநோபில், பிரான்ஸ்
1972 சாப்போரோ, ஜப்பான் 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988 கால்கேரி, கனடா 1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994 லில்லேஹாம்மர், நார்வே 1998 நாகானோ, ஜப்பான்
2002 ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா 2006 தோரீனோ, இத்தாலி
2010 வான்கூவர், கனடா
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக்ஸ§ம் சம்மர் ஒலிம்பிக்ஸ§ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.

2012/07/29

அரிதாக கிடைத்தவை...

மரம்கொத்திப் பறவை


இது போதும் எனக்கு
------------------
மாலை நேரம்
கடற்கரை ஓரம்
மடி தனில் அவள்
ஒளிந்து கொள்ளும் நிலவு
இது போதும் எனக்கு


இருட்டிருந்தும் கண்களில் ஒளி
மறைத்திருந்தும் மறக்காத மேனி
அணைத்திருந்தும் அகலாத பிரிவு
அனைதுமிருந்தும் தீராத மோகம்
இது போதும் எனக்கு


தனியாக ஒரு தீவு
தண்ணீரில் விளையாடும் கால்கள்
கரம் பிடிக்கும் மென்மை
கண் எதிரே குளுமை
இது போதும் எனக்கு


வான் முழுதும் மேகம்
வெளி முழுதும் மழை
கையருகில் அவள் துணை
ஜன்னல் வழி சிறு தூரல்
இது போதும் எனக்கு


வெளிநாட்டில் பிள்ளைகள்
லேசாக மூட்டு வலி
எனக்குத் துணை அவள்
அவளுக்குத் துணை நான்
இது போதும் எனக்கு

2012/07/28

உலகின் பெரிய வழிபாட்டுத் தலம்




உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

2012/07/03

பில்லா 2 முன்னோட்ட காட்சி 
என்னோட நண்பனா இருக்கறதுக்கு எந்த தகுதியும் வேணாம்... 
ஆனா எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்...





‎"அஜித்" என்ற
மூன்றெழுத்து மந்திரம்
தன்னம்பிக்கை என்பதன்
தாரக மந்திரம் !
வெற்றியை காட்டிலும்
தோல்வியே அதிகம் கண்டவன் நீ !
தோல்வியை வெற்றியாக்கும்
சூட்சமம் கொண்டவன் நீ !
நண்பனை விட
எதிரியே அதிகம் உனக்கு ,
எதிரியும் உனைப் புகழும்
ஏகாந்த குணம் உனக்கு .....
முகுதுத்தண்டில்
பெரும் காயம் கொண்டும் - உன்
முதுகெலும்பு
வளைந்ததது இல்லை எதற்கும் ...
விழ விழ எழுவதும்
எழ எழ துணிவதும்
எவனுக்குமல்ல - அது
உனக்கே சாத்தியம் .....
முகத்தின் பின் பேசும்
முறை அறியா மேன்மகன் நீ !
நேர்பட பேசிவிடும்
நேர்மையான ஆண்மகன் நீ !
வாரிசுகள் ஆளும்
திரையுலகில் நீ
தன்னைத்தானே செதுக்கி
தன்னிகரற்று நின்றவன்..
ஏற்றி விட எவரும் இல்லை ,
ஆனால் விழநேர்ந்தால்
உன்னை தாங்கிக்கொள்ள
ரசிகர்கள் நாங்களுண்டு...
தன்னடக்கம் ,தன்னம்பிக்கை ,தனிவழி என்று
தரணிபோற்ற வாழ்ந்திருக்கும்
தலைமகனே!!!
உன்னை வாழ்த்த என்னிடம்
வார்த்தை இல்லை என்றாலும்
வணங்குகிறேன்...
என்றும் சிகரம் தொட்டு வாழ
வாழ்த்துகிறோம்!!!!!!!
"தல" ஸ்டைல் ல சொன்ன
"என்ன யாராலையும் அழிக்க
முடியாது"
தல போல யாரு?
தலைக்கு நிகர் யார் ?

2012/06/25


உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது?


அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.

இன்னொரு சூரியன்

ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?

இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?

இணைய தளங்களில்...

கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.

நீர் சுள்ளான்


ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.

சூப்பர் நோவா

ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!

இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.

நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.

அழிவு நிச்சயம்

உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.

அறியாமை

உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை

ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

2012/06/20


கணணியில் வரவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கணணிகள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கணணியின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கணணியையும், மென்பொருள் அப்ளிகேஷனையும் இயக்கலாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கணணிகள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கணணிகள் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கணணி இனி டெஸ்க்கில் உள்ள டாப் கணணியாக இயங்கும்.

5. வீடுகளில் உள்ள கணணிகள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கணணியே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7. இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும்.

இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்க வேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9. இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர்கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கணணியுடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கணணி, புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் வர இருக்கின்றன.